![]() |
![]() |
NEWS BRIEF: இந்திய ஏவுகணை அக்னி-4, வரும் புதன்கிழமை ஏவப்படலாம்!Viruvirupu, Monday 16 April 2012, 07:30 GMT
அணு ஆயுதம் ஒன்றை ஏந்திச் செல்லக்கூடிய இந்திய தயாரிப்பு ஏவுகணை, நாளை மறுதினம் (புதன்கிழமை) ஏவப்படலாம் என்று தெரியவருகிறது. அக்னி-5 ரக ஏவுகணை இது. 5,000 கி.மீ. ரேஞ்ச் உடைய, தரையில் இருந்து தரைக்கு (surface-to-surface) ஏவப்படக்கூடிய இந்த ஏவுகணை இதுவரை பரிசோதித்து பார்க்கப்படவில்லை. ஏவுகணைப் பரிசோதனை எப்போது நடைபெறும் என்பது இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ஏவப்படுவதற்கான ஏற்பாடுகள் கிட்டத்தட்ட பைனஸ் ஸ்டேஜில் இருப்பதாக தெரியவருகிறது. ஒரிசா கரையோரமாக உள்ள வீலர் தீவில் உள்ள launch pad-4, ஏவுகணை பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியா இதுவரை பரிசோதனை செய்து பார்த்த ஏவுகணைகளுக்கும், இந்த ஏவுகணைக்கும் இடையே என்ன வேறுபாடு? இது ஏவப்படக்கூடிய தொலைவு முக்கியமாக வேறுபாடு. இதுவரை இந்தியா பரிசோதித்துப் பார்த்த அக்னி-1, 700 கி.மீ. தொலைவு செல்லக்கூடியது. அக்னி-2, 2,000 கி.மீ, அக்னி–3, அக்னி-4 ஆகியவை 3,000 கி.மீ. தொலைவு வரை செல்லக்கூடியவை. புதிய அக்னி-5 ரக ஏவுகணையின் ரேஞ்ச், 5,000 கி.மீ.! அத்துடன் இந்த ஏவுகணை எடுத்துச் செல்லக்கூடிய pay-load, 1 டன்! 5,000 கி.மீ. ரேஞ்ச் என்பது, கண்டம் விட்டு கண்டம் (Inter-Continental) செல்லக்கூடிய ஏவுகணையாக கருதப்படும். உலகில் மிகச்சில நாடுகளிடமே, கண்டம் விட்டு கண்டம் செல்லக்கூடிய ஏவுகணைகள் உள்ளன. அப்படியான நாடுகளை ICBM (Inter-Continental Ballistic Missiles) கிளப் நாடுகள் என்பார்கள். நாளை மறுதினம் ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடந்து விட்டால், இந்தியாவும் கிளப்பில் இணைந்துவிடும். திரும்பிப் பாருங்கள்:கிடுகிடு அழகிரி, கிளி ஜோசியம் பார்க்காத குறை!LATEST UPDATES
|
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
|