![]() |
![]() |
‘காங்கிரஸ் தலைவரின் பர்சனல் விவகாரம், இனி பர்சனல் அல்ல’ -உயர்நீதிமன்றம்Viruvirupu, Saturday 21 July 2012, 04:47 GMT
![]() ரிப்போர்ட் பகிரங்கம் ஆனால் சிக்கலா? ‘காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரியின் பர்சனல் விவகாரம், இனியும் பர்சனல் அல்ல’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம். ரோகித் என்ற இளைஞர் என்.டி. திவாரிதான் என் தந்தை என வழக்கு தொடர்ந்த விவகாரம்தான் இது. புகார் உண்மைதானா என்பதை உறுதி செய்ய என்.டி. திவாரி, டி.என்.ஏ சோதனை செய்யப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, என்.டி. திவாரியிடம் கடந்த மே மாதம் 29-ம் தேதி டி.என்.ஏ சோதனைக்காக ரத்தம் எடுக்கப்பட்டது. ரிப்போர்ட்டும் வந்துவிட்டது. இந்த ரிப்போர்ட் வெளியே பகிரங்கமாவது, என்.டி. திவாரிக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடும் என்பது, அவருக்கே தெரிந்துள்ளது. அதனால் அவர், “குறிப்பிட்ட டி.என்.ஏ ரிப்போர்ட்டை பகிரங்க படுத்த கூடாது. இந்த வழக்கு முடியும்வரை ரிப்போர்ட் ரகசியமாக வைக்கப்பட் வேண்டும்” என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நிராகரித்திருக்கிறார் நீதிபதி ரேவா கேத்ரபால். ‘‘சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், டி.என்.ஏ சோதனைக்காக ரத்தம் எடுப்பது, மற்றும் டி.என்.ஏ. ரிப்போர்ட்டை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு அனுப்புவது ஆகியவை ரகசியமாக நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. ஆனால், விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டும் என கூறவில்லை. டி.என்.ஏ அறிக்கை விவரங்கள், 27-ம் தேதி நடைபெறும் விசாரணையில் பகிரங்கமாக விவாதிக்கப்படும்’’ என்கிறது அவரது உத்தரவு. என்.டி. திவாரி இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யாவிட்டால், 27-ம் தேதி உண்மை வெளியாகும்! LATEST UPDATES
|
ஸ்டார் கட்டுரைகள்
போட்டோ எஸ்ஸே
LATEST UPDATES
|