![]() |
![]() |
![]() திவாகரன் நடராஜனுடன் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்ற எபிசோட்!
There was a foreign escape episode about Divakaran, with the help of Nadarajan developed and..
Viruvirupu, Sunday 05 February 2012, 03:45 GMT
Chennai, India: There was a foreign escape episode about Divakaran, with the help of Nadarajan developed and, almost ready to be performed. But, at the last moment, matters changed and, plan modified!போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டவுடன், அவர் போய் தி.நகரில் முடங்கிக் கொண்டாலும், வெளியே நடப்பவை அனைத்தும் விலாவாரியாக அவரது காதுக்கு வந்து சேர பக்காவான முன்னேற்பாடு இருந்தது. தமது ஆட்கள் ஒவ்வொருவருக்கும் செக் வைக்கப்பட்டுக் கொண்டு வருவதை அவர் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். பாஸ் என்று அ.தி.மு.க. சர்க்கிளில் அழைக்கப்பட்ட திவாகரன் மன்னார்குடியிலேயே தங்கியிருக்க, வெளிவேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்த நபரின் பெயர் வினோதன் (வினோதகன் அல்ல. அவர் வேறு நபர்) வினோத் என்றும் அவரை கட்சி வட்டாரங்களில் தெரியும். இந்த வினோத் மற்றும் அவரது நெருங்கிய நட்பு வட்டம் விசாரணை வளையத்துக்குள் வந்த உடனேயே “பாஸ் இன் ட்ரபிள்” என்பதைப் புரிந்து கொண்டார் அவர். உளவுத்துறையின் பூரண கண்காணிப்பில் இருந்த சசிகலாவை, அப்போது அவரது கணவர் நடராஜன் நேரில் வந்து சந்திக்கவில்லை. ஆனால், நடராஜன் சார்பில் அடிக்கடி வந்து சந்தித்துக் கொண்டிருந்த நபர், முன்பு காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர்தான். இந்த ஆள் வந்து போவது நடராஜனின் மெசஞ்சராக என்பதை உளவுத்துறையும் தெரிந்து வைத்திருந்தது. திவாகரன் சிக்கலில் மாட்டுகிறார் என்று தெரிந்தவுடன் சசிகலா செய்த முதல் மூவ், தன்னை வந்து சந்திக்கும் நடராஜனின் மெசஞ்சர் மூலமாக பெசன்ட் நகருக்கு ஒரு அவசர தகவல் அனுப்பியதுதான். “நீங்க என்ன செய்வீர்களோ தெரியாது, திவாகரனை இந்த சிக்கலில் இருந்து வெளியே எடுத்து விடுங்கள். பிரச்னை முடியும்வரை அவரை எங்காவது வெளிநாட்டுக்கு, இவர்களால் ரீச் பண்ண முடியாத இடத்துக்கு அனுப்பி வையுங்கள்” என்பதுதான் அந்த மெசேஜ். போஸ்ட்மேனாக தகவல் காவித் திரிந்த நபர், உளவுத்துறை தம்மையும் வாட்ச் லிஸ்டில் வைத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாத காரணத்தால், முட்டாள்தனமான காரியம் ஒன்றைச் செய்தார். சசிகலா பாஸ் பண்ணிய மெசேஜை நடராஜனிடம் சொன்னதுடன் நின்றுவிடாமல், ஆர்வக் கோளாறில் தாமும் சோலோவாக முயற்சி ஒன்றைச் செய்தார். அப்போது சுந்தரகோட்டையில் தங்கியிருந்த திவாகரனை தொடர்பு கொண்டு, இது பற்றி டிஸ்கஸ் பண்ணியதில், இப்படி ஒரு லைன் ஓடுவது உளவுப் பிரிவுக்கும் தெரியவந்தது. வெளிநாடு செல்வதென்றால், சிங்கப்பூர் செல்வது என்றும் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டதும், உளவுத்துறைக்கு தெரியவந்து விட்டது. இது நடந்தபோது, திவாகரனை கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை. திவாகரன் தடையில்லாமல் நடமாட விடப்பட்டிருந்தார். இவர்களது திட்டப்படி இந்தியாவை விட்டு திவாகரன் கிளம்பினால், பிற்பாடு சிக்கல் ஏற்படும் என்று புரிந்து கொண்ட உளவுத்துறை, திவாகரனுக்கு மறைமுக மெசேஜ் ஒன்றைக் கொடுத்தது. கிருத்துமஸ் டயத்தில் நடைபெற்ற இந்த விவகாரம் எமக்கு தெரியவந்தபோது, டிசம்பர் 28-ம் தேதி, விறுவிறுப்பு.காமில் “திவாகரனுக்கு உளவுத்துறை: சிங்கப்பூருக்கு ஓடும் பிளானா? மறந்திடுங்க!” என்ற தலைப்பில் நியூஸ் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். (தவற விட்டீர்களா? கீழே ‘தொடர்புடையவை’ பகுதியில் அந்த நியூஸ் ஸ்டோரியை பார்க்கவும்) அதில் உள்ள ஒரு பகுதியைப் பாருங்கள்:
இந்த மெசேஜ் கிடைத்ததாலோ, என்னவோ, வெளிநாடு செல்லும் பிளானை சிறிது காலம் மூட்டைகட்டி வைத்து விட்டார்கள். இதற்கிடையே நடராஜன் ‘வேறு விஷயமாக’ ஒருமுறை மலேசியாவுக்கு சென்று திரும்பினார். அவரது ட்ரிப் உளவுத்துறையை அலர்ட் பண்ணியது. மலேசியா கனெக்ஷன்கள் தொடர்பாக உளவுத்துறை துருவத் தொடங்கியது. தமிழக காவல்துறை என்னதான் தம்மை டிஃபென்ட் பண்ணினாலும், நடராஜனால் முன்பு காவல்துறைக்குள் பிளாண்ட் செய்யப்பட்ட ஆட்கள் இன்னமும் அவருக்கு விசுவாசமாகவே உள்ளார்கள். அவர்கள் மூலம், தமது மலேசியா கனெக்ஷன்கள் துருவப்படுகின்றன என்ற விபரம், நடராஜனுக்கும் போய் சேர்ந்தது. அவர் உஷாரானார். இந்தச் சமயத்தில்தான், சசிகலா உறவினர்கள் இல்லங்களில் சற்று வில்லங்கமான அன்-ஆஃபிஷியல் ரெயிடுகள் நடந்தன. சில சூட்கேஸ்கள் எடுக்கப்பட்டு, தமிழக எல்லைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன. அதில் சில கோடி இழப்பு ஏற்படவே, மீதியாகவுள்ள பல கோடிகளை காப்பாற்ற ஓவர்ஸீஸ் மணி-ட்ரான்ஸ்பர்கள் அவசியமாகின. நடராஜன் மீண்டும் வெளியே செல்ல வேண்டிய தேவையும் ஏற்பட்டது. இதில் திவாகரனின் கோடிகளும் அடக்கம் என்கிறார்கள். எனவே இந்த ட்ரிப்பில் திவாகரனையும் அழைத்துச் செல்வது என்று முடிவாகியதாக தெரிகிறது. திவாகரனும் சென்னைக்கு தருவிக்கப்பட்டார். தமது மலேசிய விவகாரங்களை உளவுத்துறை கவனிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தெரிந்து கொண்ட நடராஜன், சிறியதாக ட்ரிக் ஒன்று செய்திருந்தார். அதை உளவுத்துறை அப்போது அறிந்திருக்கவில்லை. நள்ளிரவுக்கு சற்றுமுன் பெசன்ட் நகர் வீட்டில் இருந்து கிளம்பிய அவர்கள் ஏர்போர்ட் சென்றபோது, உளவுத்துறை பின்தொடர்ந்தது. ஏர்போர்ட்டில் அவர்கள் மலேசியாவுக்கு விமானம் ஏறுமுன் மடக்கலாமா என்றுகூட யோசித்தார்கள். இருவரையும் மடக்குவதா, அல்லது திவாகரனை நிறுத்திக் கொண்டு, நடராஜனை பயணம் செய்ய அனுமதிப்பதா என்று மேலதிகாரிகள் மட்டத்தில் தலையை உடைத்துக் கொண்டு இருந்தார்கள். இதற்கிடையே, இந்த விவகாரம் டிஸ்கஸ் பண்ணப்படும் இன்ஃபர்மேஷன், நடராஜனுக்கு அவரது காவல்துறை கனெக்ஷன் மூலம் தெரிய வந்தது. “திவாகரனை அழைத்துச் செல்லாதீர்கள். நிச்சயம் மடக்குவார்கள். நீங்கள் மட்டும் சென்றால் விட்டுவிட சான்ஸ் உள்ளது” இந்த தகவலின்பின், நடராஜன் திடீர் முடிவை எடுத்தார். ஏர்போர்ட்வரை அழைத்துச் சென்ற திவாகரனை திருப்பி அனுப்பி விட்டார். தாம் மட்டும் ஏர்போர்ட்டுக்குள் சென்றார். இந்த திடீர் திருப்பத்தில் உளவுத்துறை குழம்பிவிட, அவர்களுக்கு அடுத்த ஷாக் ஒன்றைக் கொடுத்தார் நடராஜன். அவர் மலேசியா செல்லும் விமான கௌன்டர் பக்கம் செல்லவில்லை. அதுதான் அவர் ஏற்கனவே செய்து வைத்திருந்த ட்ரிக்! சென்னையில் இருந்து நள்ளிரவு 12.15-க்கு புறப்பட்டு பாங்காக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானம் TG338-ல் போர்டிங்-பாஸ் பெற்றுக் கொண்டார். புதிதாக ஏதோ விவகாரம் சிக்க போகின்றது என்று நினைத்தோ, என்னவோ, உளவுத்துறை நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருக்க, நடராஜன் பாங்காக் பறந்து விட்டார். அதன்பின், இவர்கள் சென்னை ஏர்போர்ட்டில் பாங்காக்கில் இருந்து வரும் விமானங்களை வாட்ச் பண்ண ஆள் போட்டு வைத்திருந்தார்கள். அதில் நடராஜன் வரவில்லை. அவர் புறப்பட்டுச் சென்று 3-வது நாள், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கினார் நடராஜன். அதே விமானத்தில் வந்த மற்றொரு வி.ஐ.பி. தயாநிதி மாறன். சென்னை விமான நிலையத்தில், இருவரும் பேசிக்கொண்டதை பார்த்த உளவுத்துறை, இதை அரசியல் ரூட்டில் பார்க்கத் தொடங்கியது. நடராஜனின் வெளிநாட்டு முதலீடு விவகாரம் செகன்டரியாக போனது! நாம் இந்த விவகாரத்தில் கொஞ்சம் டீப்பாக துருவியபோது, சென்னையில் இருந்து பாங்காக் சென்ற நடராஜனிடம் தாய்லாந்து விசா இருந்த போதிலும், அவர் தாய்லாந்துக்குள் செல்லவில்லை என்று தெரியவந்தது. காலை 5.10-க்கு பாங்காக்கில் இறங்கிய அவர், இமிகிரேஷன் சோதனைகளுக்கு செல்லாமல், ட்ரான்சிட் ஹாலுக்கு சென்று மற்றொரு இ-டிக்கெட்டுக்கு போர்டிங்-பாஸ் பெற்றுக் கொண்டார். அந்த போர்டிங்-பாஸ், காலை 8.45-க்கு கோலாலம்பூர் செல்லும் TG415 விமானத்துக்குரியது. அதில் பயணித்து, காலை 1155க்கு மலேசியா சென்று விட்டார் நடராஜன்! திரும்பி வரும்போது, மலேசியாவில் இருந்து நேரே சென்னை வராமல், மலேசியா டு சிங்கப்பூர் தரை மார்க்கமாக சென்று, சிங்கப்பூர் டு சென்னை பிளைட் பிடித்தால், இந்தியாவில் எந்த ரிக்கார்டும் கிடையாது. சரி. இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட வேண்டுமே… சென்னை ஏர்போர்ட்டில் அவர் பாங்காக் செல்ல போர்டிங்-பாஸ் எடுத்தபின், அந்த ஏர்லைன் கம்ப்யூட்டரில் அவரது பி.என்.ஆரை (PNR – Passenger Name Record) பார்த்தால் அவர் ட்ரான்ஸிட் மூலமாக மலேசியா செல்வதை உளவுத்துறை தெரிந்து கொள்ளலாமே? அதற்கும் ஒரு ட்ரிக் உள்ளது. சொல்லித் தருகிறோம், வெளியே சொல்லி விடாதீர்கள். 1) நடராஜன் சென்னையில் இருந்து புறப்படும் முன், அவரது வெளிநாட்டு கிரெடிட் கார்டு நம்பரை யாரோ ஒருவரிடம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும். 2) பாங்காக் விமானம் கேட்டில் இருந்து புறப்பட்டதும், தாய் ஏர்வேஸ் தமது கம்ப்யூட்டரில் அந்த பிளைட்டை பைனலைஸ் செய்வார்கள். அதை எஃப்.எஃப். ஸ்டாட்டஸ் என்பார்கள். 3) பிளைட் ஏர்-போர்ன் ஆனதும், ஏர்லைன் கம்ப்யூட்டரே அந்த பிளைட்டை போஸ்ட் டிபாச்சர் நிலைக்கு மாற்றிவிடும். அதை பி.டி. ஸ்டாட்டஸ் என்பார்கள். அதன்பின் நடராஜனின் சென்னை பி.என்.ஆர். புதிய புக்கிங் எதனுடனும் ஆட்டோமேட்டிக்காக அசோசியேட் ஆகாது. 4) இந்த விமானம் 3 மணி நேரம் பறக்கும். அந்த நேரத்தில், நடராஜனின் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி, பாங்காக் கோலாலம்பூர் விமானத்தில் புக்கிங் செய்தால், புதிய பி.என்.ஆர். இலக்கத்துடன் இ-டிக்கெட் ஒன்று அவரது பிளாக்பெரிக்கு ஃபோர்வார்ட் பண்ணப்படும். (அதற்கு முன்னரே புக்கிங் செய்தால், அதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது) 5) அதிகாலை பாங்காக்கில் இறங்கியபின், இமிகிரேஷன் போகாமல், ட்ரான்சிட் லவுஞ்சுக்கு போனால், இந்த புதிய இ-டிக்கெட்டை வைத்து கோலாலம்பூர் செல்ல போர்டிங்-பாஸ் எடுக்கலாம். சென்னை-பாங்காக் பக்கேஜ் டாக்கை காண்பித்தால், சூட்கேஸ்களை ஏர்லைன்ஸே ட்ரான்ஸ்பர் பண்ணி விடுவார்கள்… BINGO! -ஏர்லைன்ஸ் தரவுகளுடன், விறுவிறுப்பு.காமுக்காக ரிஷிஇவற்றை தவற விட்டீர்களா? LATEST ON VIRUNEWS
|
UPDATES
|